God is love

God is love

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

சிறப்புடைய இடுகை

மனம் போல் வாழ்வு

 பிரபஞ்சத்தை ஆளும்  ஒழுக்கம் . ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு த...

இந்த வலைப்பதிவில் தேடு

A lifelong learner

இந்த வலைப்பதிவில் தேடு

Chidambarambabuji

Chidambarambabuji
A lifelong learner

எனது வலைப்பதிவு பட்டியல்

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

புதன், 13 மார்ச், 2024

T.M.Chidambarathaanupillai M.L.C.in Travancore Sri Chitra State Council

 தோவாளை, வக்கீல்.-தென் திருவிதாங்கூர் சமஸ்தான மேனாள்   ஸ்ரீ சித்ரா  சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C)முத்தையாபிள்ளை

சிதம்பரதாணுபிள்ளை

(டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை)

ஒரு வரலாற்று குறிப்பு.


தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோவாளை தாலுகா ,நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாக  இருந்து வந்தது.தோவாளை கிராமத்தை பூர்வீகமாக  கொண்ட  வக்கீல் மற்றும் மேனாள் தென்திருவிதாங்கூர் சமஸ்தான ஸ்ரீ சித்ரா சட்டமேலவை உறுப்பினர் (M.L.C)

காலஞ்சென்ற திரு.டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை ஆவார்.அன்னாரது தந்தையார்.முத்தையாபிள்ளை ,தாயார் சிதம்பரவடிவு  ஆகும்.

இவருடைய பொது  வாழ்க்கையின் போது மொழிவாரியாக நமது பாரத தேசம்பிரிக்கப்படவில்லை.எனினும் தமிழர்களுக்கு தென் திருவிதாங்கூர் சமஸ்தன மன்னர்கள்  ஆட்சியின் போது தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்க பெறவில்லை.ஆட்சி மொழி மலையாளம் மற்றும் ஆங்கிலமாகவே இருந்தது.சட்டமன்றங்களிலும்,

நீதிமன்றங்களிலும் வழக்குகள்,அலுவலக நடவடிக்கைகள் , மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடந்து வந்தது.

வக்கீல்டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை.

நாகர்கோவில் மஜிஸ்ரேட்கோர்ட்டில் 10/09/1946 ம் நாளான்று ஒரு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாகர்கோவில் நீதிமன்ற நடவடிக்கைகள் ,வழக்குகள்,தீர்ப்புகள் அனைத்தும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும் ,தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் நாஞ்சில்நாட்டில் மக்களின் நலன் கருதி நீதிமன்ற நடவடிக்கைகளை ,வழக்கு மற்றும் தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுவை சமர்பித்தார்.

அதன் எண் File No.D.Dis.3894/1946,Judicial dated 17/10/1946 ,Memorandum submitted  byT.M.Chidambarathanupillai.M.L.C,

Nagercoil dated 10/9/1946.K.A.T.V.M.என்பதாக Trivancore Gazetteer ல் பதிவாகி உள்ளது.அதன் பிறகு நாகர்கோவில் நீதிமன்ற நடவடக்கைகள், வழக்குகள்,தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

மருமக்கள் தாயம் என்ற சமுதாய வழக்கம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.இந்த வழக்கம்  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு பல இன்னல்களையும்,குடும்ப அநீதிகளையும் விளைவித்து வந்தது.இந்த வழக்கத்தை  ஒழிக்க பல தமிழ் சமுதாயத்தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள்.அதில் வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் ஒருவர்.

29ம் தேதி ஏப்ரல் மாதம் 1921ம் ஆண்டு நடந்த நாஞ்சில் நாட்டு .வெள்ளாளர் சமுதாய சங்கம் ஏழாவது கூட்டம் குலசேகரன்புதூர்,என்ற உயரவிளை(ஒசரவிளை)ல் வைத்து திரு.வேலுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.இதில் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளையும் கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்கள்.திருவிதாங்கூர் ராஜாராஜா வர்மா குழு நடத்திய "மொழி கேட்டல்"என்ற நிகழ்விலும் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை கலந்து கொண்டு மருமக்கள் தாய வழக்கத்தின்  குறைகளை விளக்கி கூறினார்.அதன் விளைவாக மருமக்கள் தாயம் ஒரு முடிவுக்கு வந்தது.


டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை தன்னுடைய சட்ட மேலவை உறுப்பினர் பதவியின் போது தோவாளை தாலுகா  விவசாய பெருங்குடி மக்கள் திருவிதாங்கூர் சமஸ்தானம் தேவஸ்தானம் கோவில்களில் பணிபுரிந்த   மணியக்காரர்களால் கடுமையான விவசாய வரி புகுத்தப்பட்டு விவசாயிகள் பெருந்துன்பத்திற்கு ஆளானார்கள்.இதை கண்டித்து வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை,ஒரு மாபெரும் கிரிஷிகர்மார் மாநாட்டை ஜனவரி 30ம்தேதி 1948ம் வருடம் 

தோவாளை  திடலில்  (தற்போதைய ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவில் முகப்பு)வைத்து நடைபெறுவதாக இருந்தது.ஆனால் அன்றைய தினம் மகாத்மா காந்தியடிகள் சுடப்பட்டு காலமானதால் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அடுத்தநாள் மாகாத்மாவின் இறுதி அஞ்சலி கூட்டமாக மாற்றப்பட்டது என்று முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்கிறார்.


திரு.டி.எம்.சிதம்பர தாணுபிள்ளை, தோவாளையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் நாகர்கோவில் இராமவர்மபுரத்திலிருக்கும் ஜவகர் தெருவிலுள்ள தன்னுடைய சொந்த வீட்டில் வசித்துவந்தார்.நல்ல பெயரோடும் புகழோடும் வாழ்ந்த வக்கீல் டி.எம்.சிதம்பரதாணுபிள்ளை 23/04/1951 ம் நாள்  நாகர்கோவிலில் அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் காலமானர்.


ஆதாரம்.


1)நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மீகம்.கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.


2) முனைவர்.அ.கா.பெருமாள்.

நாட்டார் வழக்காற்றுவியல்.


3)Dr. R. Maheswari Assistant Professor Department of  History D.G.Govt.Arts College Mayiladuthurai


4)Proceedings of the Travancore Sri Chitra State Council. Third Council. Fourth session. Saturday ,the 20th July 1946 ..Original report. Vol.XXVIII No.1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக