God is love

God is love

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

சிறப்புடைய இடுகை

மனம் போல் வாழ்வு

 பிரபஞ்சத்தை ஆளும்  ஒழுக்கம் . ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு த...

இந்த வலைப்பதிவில் தேடு

A lifelong learner

இந்த வலைப்பதிவில் தேடு

Chidambarambabuji

Chidambarambabuji
A lifelong learner

எனது வலைப்பதிவு பட்டியல்

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

சனி, 28 டிசம்பர், 2024

Around the corner

 Around the corner.


I have promises to keep up,

Regrets to ignore ;


Traditional New year resolutions,

Resolve to remain contented ;


News makes us nervous,

Know yourself to be conscious ;


The world around us is shrinking digitally,

The settlement is in your mind consciously ;


Haves and Haven'ts will remain,

As long as materials rule the world;


Mind is the matter to be mentored, 

The rest is the dream to be shattered. 


#T.Chidambaram

திங்கள், 23 டிசம்பர், 2024

மோட்சம்

  மானிடப்பிறவியே மோட்சத்திற்கான  திறவுகோல் 


நம்முடைய வேதங்கள்,தமிழ் மறைகள் எல்லாம் தனிமனித மேம்பாட்டையும்,ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டையும் கருதி செய்யப்பட்டவைகள்தான்.சுயநலமற்று வாழ்ந்த நம் மூதாதையர்கள் வழி வந்த அத்தனை ஆன்மீக மற்றும் தத்துவ கருத்துக்களும் நம்மை வாழ வைத்துக்கொண்டு வருகிறது.அவற்றை கடைபிடித்து வாழ்வதே முக்தி,மோட்சத்திற்கான திறவுகோல்.

அவற்றிற்கான உபகரணங்களே கோவில்கள்,சடங்குகள்,சம்பிரதாயங்கள். இவற்றை பேணி பாதுகாப்பாதே ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் கடமை மற்றும் பொறுப்பு.

செவ்வாய், 10 டிசம்பர், 2024

அச்சம் என்பது மடமையடா.

 மனிதனின் சுபாவமே தனக்கு அறிமுகம் இல்லாத மனிதர்கள்,இடம்,பொருட்கள்,மொழி இவற்றை பார்த்து பயப்படுவதுதான்.இந்த மனித  இயற்கை சுபாவத்தை பயன்படுத்தி ,பிறரை பயமூட்டி அதில் குளிர் காய்ப்பவர்களும் உண்டு.

ஒரு இடத்தைப்பற்றி,பொருட்களை கையாளும் விதத்தை,பிற மொழியை மனிதர்களை பற்றி நாம் நூற்கள் மூலமாக அறிந்து கொண்டால் பயம் என்ற எதிர்மறை உணர்விலிருந்து விடுபடலாம்.பொது அறிவையும் வளர்த்து கொள்வது அவசியம்.

எல்லோரும்  எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.அது தேவையும் இல்லை.ஆனால் எந்த காலகட்டத்திற்கு எது தேவையே அதை புத்தங்கள் மூலமாக அது சம்பந்தமாக கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்வதில் தவறில்லை.தேவையில்லாத பய உணர்வு மேலும் நம்மை சிக்கலில் ஆழ்த்தும்.பிறர் நம்மை பய உணர்ச்சிக்கு ஆளாக்கும் போது விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

ஒருவரின் தோல்வி, மற்றவருக்கு பாடமாக அமையலாமே தவிர பயமாக மாறக்கூடாது.இது ஒருவருடைய தன்னுணர்வு சம்பந்தப்பட்டது.தன்னுணர்வை அறிவு பூர்வமாக வளர்த்து கொண்டவர்கள், எத்தகைய சூழ்நிலைகளையும் கடந்து செல்ல முடியும்.

அச்சம் என்பது மடமையடா.

திங்கள், 9 டிசம்பர், 2024

தினசரி

 தினசரி எல்லா நாளிதழ்களையும் நுனிப்புல் மெய்வதுண்டு.ஒன்றிரண்டு எனக்கு தேவையான கருத்துக்களை பார்ப்பதும் உண்டு.எல்லா தலையங்கமும் ஒரே கருத்துதான்.மொழியின் நடை வித்தியாசப்படுகிறது. அவ்வளவே.

இந்திய தத்துவ கோட்பாடான அத்வைதம், எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்தது போலாகுமோ,அது போல இது இப்படிதான் என்று தெரிந்த பிறகு மேலே சொல்ல ஒன்றுமில்லை.நாட்களும், தட்ப வெட்ப நிலைகளும் மாறுகிறது, மனித பொதுமனங்களில் மாற்றமில்லை.தினசரி நிகழ்வுகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் மனது தன்னை சுற்றி இருப்பவர்களை நினைப்பது இல்லை.அரசாட்சிக்கு இந்த மனப்பான்மை மிக அவசியம்.

இதுவே தினசரி .

The art of copy writing

 Copy writing is an art of digital writing in blogger, email,websites and other social media. Today I attended an online course on Copy writing and earned a certificate from Skill India.

    The course details every aspect of copy writing such as how to attract readers and customers when you publish a content. The main idea is to get the subscribers to like your products. It is not only commercial point of view but also literary point.

The course will be useful for everyone who wish to improve their digital writing skills.

Try your hand in "Skill India" website.

T.Chidambaram.



புதன், 4 டிசம்பர், 2024

வரட்டுமா மாப்பிளே!

 மச்சான் என்ற சொல் தற்போது "மச்சி" " மாப்பிளே" " மச்சீஸ்"போன்று தமிழகத்தில் பல இடங்களில் பல உறவு முறைகளால் வழங்கப்பட்டு வருகிறது."மச்சினன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம்" என்ற சொலவாடை உண்டு.அண்மையில் வந்த "மெய்யழகன்"திரைப்படம் இந்த உறவை சரியாக. முறையில் திரையில் வெளிக்கொணர முயற்சி செய்திருந்தார் அந்த இயக்குநர்.

 உண்மையில் இந்த" மச்சினன்" என்ற உறவு தமிழக குடும்ப கலாச்சாரத்தில் முக்கியமான ஒரு உறவாகவே இருந்து வருகிறது.நண்பர்கள் ,வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் "மாப்பிளை" "மச்சான்" என்று அழைத்து தங்கள் நட்பை பலபடுத்தி கொள்வதை அன்றாடம்  பார்க்கிறோம்.சுப்பிரமணியபுரம் திரைப்படமும் இந்த உறவை  வெளிக்கொண்டு வந்தது.


இந்த உறவு பெரும்பாலும் கறிவேப்பிலை உறவாகத்தான் மற்றவர்களால்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.உதாரணத்திற்கு,ஒரு திருமண வீடு,சடங்குவீடுஅல்லது ஒரு துக்க வீடு ,ஒரு திருவிழா போன்ற நிகழ்வுகளில்  இந்த மாப்பிளை உறவு யாராவது ஒருவர் வடிவில் வந்து முன் நிற்கும் குலசாமி.

வெளியூரிலிருந்து வரும் தன் சொந்த உறவுகளை, அல்லது நண்பர்களை, இரயில்வே நிலையத்திலிருந்து வரவேற்று அவன் ஊர்திரும்பி செல்லும் வரை தினசரி பொழுதை கழித்து அவர்களுக்கு  அன்றாடம் பணிவிடை செய்து வரும் ஒரு உறவு.இதனால் அவனுக்கு என்ன பயன் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.அவனது வாழ்க்கை ஆதாரம் பெரும்பாலும் உறவிர்களின் வருகை மற்றும் நண்பர்களின் வருகையை பொருத்தே அமைகிறது.

சில மாப்பிளைகள் சொந்த ஊரிலேயே ,வெளியூர் பயணிக்காமல் ,யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மடிந்து போகும் ஒரு ஜீவன்.ஊரிலிருந்து வரும் உறவுகளுக்கு திருமணம் நடத்தி வைப்பான்,ஆனால் தன்னுடைய திருமணம் பற்றி யோசிக்கமாட்டான்.பிறருக்கும் அவனைப்பற்றிய அக்கரை இருக்காது. 

இதனிடையில் மாப்பிளைக்கு குடிப்பழக்கம் இருந்தால் அவனிடம் நன்றாகவே வேலை வாங்கலாம்.

தன் குடும்பத்திற்காகவும், நண்பர்களுக்காவும் வாழும் இந்த மாப்பிளை என்ற மச்சான் ஜாதியை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் சந்திக்கலாம்.

மாப்பிளே வரட்டுமா!