தினசரி எல்லா நாளிதழ்களையும் நுனிப்புல் மெய்வதுண்டு.ஒன்றிரண்டு எனக்கு தேவையான கருத்துக்களை பார்ப்பதும் உண்டு.எல்லா தலையங்கமும் ஒரே கருத்துதான்.மொழியின் நடை வித்தியாசப்படுகிறது. அவ்வளவே.
இந்திய தத்துவ கோட்பாடான அத்வைதம், எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்தது போலாகுமோ,அது போல இது இப்படிதான் என்று தெரிந்த பிறகு மேலே சொல்ல ஒன்றுமில்லை.நாட்களும், தட்ப வெட்ப நிலைகளும் மாறுகிறது, மனித பொதுமனங்களில் மாற்றமில்லை.தினசரி நிகழ்வுகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள நினைக்கும் மனது தன்னை சுற்றி இருப்பவர்களை நினைப்பது இல்லை.அரசாட்சிக்கு இந்த மனப்பான்மை மிக அவசியம்.
இதுவே தினசரி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக