வணக்கம்.
வெகுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.லஞ்சம் நம் வாழ்க்கையில் ஒரு நடைமுறையாக மாறிவிட்டது. ஒரு வேலைக்கு பணம்கொடுப்பது கூலி,சம்பளம் என்பது ஆங்கீகரிக்கப்பட்ட சொற்களாக இருந்தாலும், லஞ்சம் என்ற சொல் ஒரு சமூக அங்கீகாரம் பெறாத சொல்லாக இருக்கிறது.அரசியல் தளங்களிலும் அடிக்கடி பயன் படுத்தும் சொல்லாக இருக்கிறது.ஆனால் லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம் என்ற வாசகங்கள் அரசு அலுவலங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
தண்ணீர் இலைத்தாமரைப்போல ஒரு செயலை செய்து முடிக்க ஒரு படி மேலாகவே பணம் கொடுப்பது பழக்கமாகிவிட்டது. சம்பளம் போக படி, சம்பளம் போக கிம்பளம் ,தரகு எவ்வளவு?போன்ற வழக்கு பழக்காமாகிவிட்டது.ஆகையினால் லஞ்சம் என்ற வார்த்தை வழக்கிழந்து பழக்காமாகிவிட்டது என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.ஆனாலும் நாம் உப்புக்கு சப்பு என்பது போல் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.நேர்மையான வாழ்வு நிம்மதியை கொடுக்கும் நேர்மையற்ற வாழ்வு மன நிம்மதியை இழக்கச்செய்யும்.சேற்றில் முளைத்த செந்தாமரை போல் இன்றும் நல்ல மக்கள் வாழ்கிறார்கள்.தாமரை இலை தண்ணீர்போல நாம் நல்மக்களுடன் பழகி உழைப்பை பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் அணுகி வாழ்வதே சிறந்த வாழ்வு என்பதில் ஐயம் சிறிதும் வேண்டாம்.
