God is love

God is love

இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

லேபிள்கள்

சிறப்புடைய இடுகை

மனம் போல் வாழ்வு

 பிரபஞ்சத்தை ஆளும்  ஒழுக்கம் . ஒருவன் தன் நிலைமையைப்பற்றிச் சிணுங்குதலையும், நிந்தித்தலையும் விட்டுத் தனது வாழ்க்கையை விதிக்கும் கண்ணுக்கு த...

இந்த வலைப்பதிவில் தேடு

A lifelong learner

இந்த வலைப்பதிவில் தேடு

Chidambarambabuji

Chidambarambabuji
A lifelong learner

எனது வலைப்பதிவு பட்டியல்

Translate

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Wikipedia

தேடல் முடிவுகள்

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

வியாழன், 26 செப்டம்பர், 2024

பண்பாட்டு தேக்கம்

 பண்பாட்டு தேக்கமும் அதிர்ச்சியும்.


பண்பாட்டுத் தேக்கம்,

பண்பாட்டு மாற்றம் வற்புறுத்துதல் மூலமும் நடைபெறும். இது

பெரும்பாலும் ஒரு பகுதியை வேற்று இனத்தவர் அல்லது நாட்டவர்கைப்பற்றி வந்தேறியவர்களின் பண்பாட்டைப்பின்பற்றுமாறு

செய்வதால் நிகழும். இதற்கு எடுத்துக்காட்டாக நம் நாட்டில் ஏற்பட்ட ஆங்கிலேய ஆட்சியைக் கூடச் சொல்லலாம். இன்றைய நவீன உ லகில்

மக்கள் வேற்று நாட்டிற்குக் குடியேறும்போது அந்நாட்டின் சிலசட்டதிட்டங்களை ஏற்று நடக்கும்போது பண்பாட்டு மாற்றம் நிகழும்.

இவ்வாறான நிலையில் ஒரு பண்பாடு ஏதேனும் ஒரு காரணத்தால்மாற்றத்திற்கு இலக்காகும்போது அம்மக்கள் சில வழிகளில் மாறும்சூழலுக்கேற்பத் தகவமைந்து கொள்வர். ஆனால்சிலவழிகளில்

தகவமையாமல் நிற்பர். அவ்வாறு தகவமையாமல் போனால் தகவமைந்த புதிய கூறுகளுக்கும் அவர்களின் பழைய மரபுகளுக்கும்

(தகவமையாத கூறுகள்) இடையே தேக்கம் ஏற்படும். இதையேபண்பாட்டுத் தேக்கம் (cultural lag) என்பர் மானிடவியலார்.

 எடுத்துக்காட்டாக அமெரிக்கப் பகுதியில் குடியேறும் தமிழ் மக்கள் அங்குள்ளசூழலுக்கேற்பப் பொருள்சார் கூறுகளை மாற்றிக்கொள்வர். ஆனால்அமெரிக்க மக்களின் பொருள்சாராக் கூறுகளை அவ்வளவு எளிதில்

ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இவர்களின் குடியேற்றப்பண்பாட்டில் ஒரு தேக்கம் நிலவும். பொருள்சார் கூறுகளில் ஏற்படும்மாற்றம் பொருள்சாராக் கூறுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்போனால் தேக்கம் நிகழ்வதைப் போல பண்பாட்டின் வேறு பிரிவு

களிலும் இவ்வாறு தேக்கம் நிகழ்வதுண்டு.


இதுவரை காணாத  புதிய பண்பாட்டுச் சூழலுடன் 

வினைபுரிய வேண்டிய நெருக்கடி எற்படும். இந்த வினைபுரிதலில் ஏற்படும் அதிர்ச்சியானது 

உணர்வு நிலையை மட்டுமே பாதிக்கும் என்று கூறமுடியாது..

மக்களின்  அறிதிறன்( Cognition) பாங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்த கூடிதாக இருக்கும். மக்களின் உணர்வையும் அறிதிறனையும் பாதிக்கக்கூடியதாக இவ்வதிர்ச்சி பருநிலையில் இரண்டு தளங்களோடு 

 (உணர்வு, அறிதிறன்) காணப்பட்டாலும் நடைமுறையில்

இதன் அழுத்தமாவது மனவெழுச்சி, நிலைபிறழ்வு, வாழ்வுப் பாங்கில்

இயல்பு மீறிய நோக்குநிலை, இயல்புமீறிய பகுத்தறிவு சாராமை, இயல்பாக எதிர்பார்க்கும் நடப்பியல் பிறழ்வு போன்ற எண்ணற்ற 

வடிவங்களில் வெளிப்படுவதாக இருக்கும்.


பண்பாட்டு மானுடவியல் 

பக்தவத்சல பாரதி.

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

Social change

 சமூக மாற்றம் Social Change 


கலாச்சார மற்றும் சமூக நிறுவனங்களை மாற்றும் மனித தொடர்புகள் மற்றும் உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் சமூக மாற்றத்தை சமூகவியலாளர்கள் வரையறுக்கின்றனர். 

இந்த மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்கின்றன மற்றும் பெரும்பாலும் சமூகத்தில் ஆழமான மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்துகின்றன


திருமணம் என்ற பந்தம் தற்போது மேலைநாகரீக கோட்பாடுகளின் படி ஒரு சமூக நிறுவனமாக மாறிஇருக்கிறது.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணம் என்கிற புனிதச்சடங்கு தற்போது ஒரு சமூக நிகழ்வாக மட்டும் மாறி இருப்பதை காண முடிகிறது.காரணம் பலவாக இருந்தாலும் ,முதல் காரணமாக பெண்களின் சுய மரியாதை வளர்ச்சியும் அவர்களின் பொருளாதார தற்சார்ப்பு நிலையும் கருத்தில் கொள்ள வேண்டியது இருக்கிறது.சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வந்தபிறகு பெண்களுக்கான தொழிற்கல்வி வளர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியை கண்டது மட்டுமல்லாது பெண்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்க தொடங்கியது.அவர்களது உடல் மற்றும் மனத்தகுதிக்கு ஏற்ப தகவல் தொழில் நுட்ட துறையில் வேலைவாய்ப்பு அதிகமாக உருவாகியது.இதுசமூக அமைப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறது.பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்கும் திறன் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை வெளிப்படுத்தி கொள்ளுதல் போன்ற செயல்களால் பெண்களின் சுயமதிப்பும் அவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதன் விளைவாக மற்ற சமூக நிறவனங்களான குடும்பம்,பெற்றோர்கள்,திருமணம்,குழந்தை வளர்ப்பு,கல்வி,மருத்துவம்,சுகாதாரம் எல்லா துறைகளிலும் அவர்களுடைய சமூக வெளிப்பாடு அதிகரித்ததன் விளைவு, சமூதாய அமைப்பு சிறிது நகர்ந்து நடுநிலைச்சமுதாயமாக மாற ஆரம்பித்திருக்கிறது.பெண்கள் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அதிகரித்து இருக்கிறது.மணவாழ்க்கை ஒரு புனிதமான சமூக அமைப்பிலிருந்து மாறி ஓரு சமூக ஒப்பந்தமாக மாறியாகிவிட்டது.முதல் தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்கும் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமுறை இடைவெளி அதிகமாக இருக்கிறது.இதன் விளைவாக பெற்றோர்களின் முடிவெடுக்கும் தன்மை குறைந்திருக்கிறது.அவர்களின் பொருளாதாரம் சீராக இருந்தால்

முதியவர்களின் பாதுகாப்பு உறுதி பெருகிறது.இல்லையெனில்ஒரு பாதுகாப்பு இல்லாத தன்மை உருவாகி அவர்கள் சமூகத்தில்,பிற சமூக நல அமைப்புகள்,முதியோர் இல்லம், ஆதரவற்றவர் இல்லம் போன்ற அமைப்புகளுக்கு இட்டுச்செல்லப்படுகின்றனர்..

இதில் யாரையும் குறை கூற முடியாது.காரணம் சமூக அமைப்பில் மாற்றம் நிகழும் போது அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை இரண்டு தலைமுறைகளுக்கும் வேண்டும்.